ஓடிடியில் வெளியாகிறது 'வாழை' திரைப்படம்.. எந்த ஓடிடி? என்ன தேதி?

  • IndiaGlitz, [Wednesday,September 11 2024]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி, கமல் உள்பட திரை உலக பிரபலங்கள், முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்பட அரசியல்வாதிகள் பாராட்டு தெரிவித்தனர் என்பதும் இந்த படம் சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் மிகப் பெரிய வசூலை வாரி குவித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘வாழை’ திரைப்படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் இந்த படத்தை பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘வாழை’ படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'கோட்' படத்தை மிஸ் செய்த நயன்தாரா.. எந்த கேரக்டர் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருந்ததாகவும்

நடிகர் ஜீவா குடும்பத்துடன் சென்ற கார் விபத்து.. என்ன ஆச்சு?

பிரபல தமிழ் நடிகர் ஜீவா தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் விபத்து உள்ளானதாக வெளியாகியிருக்கும் செய்தி

எத்தனை முறை திருமணம் நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்: தனுஷ், சிம்பு பட நடிகை..!

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் எனக்கு பலமுறை திருமணம் நடத்தி வைத்து விட்டன என்றும் எத்தனை முறை எனக்கு திருமணம் நடத்தி வைத்தார்கள் என்பதை நானே மறந்து  விட்டேன்

பாடகர் மனோவின் இரு மகன்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் பிரபல பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'உயிரே' பட நடிகையின் தந்தை தற்கொலை.. 6வது மாடியில் இருந்து குதித்தாரா?

மணிரத்னம்  இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான 'உயிரே' திரைப்படத்தில் நடித்த நடிகையின் தந்தை மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை