திருமணமான பெண் விரும்பிய நபருடன் வாழலாம்… நீதிமன்ற தீர்ப்பால் குமுறிய கணவர்!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் காணாமல் போன தனது மனைவியை மீட்டு தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விரும்பிய ஆணுடன் அவர் வாழ்க்கை நடத்தி வருகிறார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என பெண்ணிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பெண்ணின் கணவர் கடும் கோபம் அடைந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டேராடூன் பகுதியில் வசித்துவரும் ஜிம் பயிற்சியாளர் ஒருவரை பிப்ரவரி 2012 இல் இளம்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 6 வயதில் ஒரு மகள் இருந்த நிலையில் அப்பெண் சமூக வலைத்தளத்தில் சந்தித்த ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்த அந்த பெண், ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத் பகுதியில் வசித்துவந்த தனது காதலருடன் லிவ்-இன் முறையில் வசிக்கத் துவங்கியிருக்கிறார்.

இதையடுத்து காணாமல் போன தனது மனைவியைத் தேடி வந்த ஜிம் பயிற்சியாளர் கடந்த ஆகஸ்ட் 7, 2022 முதல் எனது மனைவியைக் காணவில்லை. அவர் சட்டவிரோதமாக கடத்தப் பட்டுள்ளார் என்று கூறி உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் பங்கஜ் புரோகித் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய பென்ச் விசாரித்து வந்த நிலையில் அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் பேசிய அப்பெண் எனது கணவர் என்னை தவறாக நடத்தினார். இனிமேல் அவருடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்படவில்லை. விரும்பிய நபருடன் வாழ்வதற்கு அவருக்கு உரிமையிருக்கிறது, அவர் விரும்பிய நபருடனே வாழலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இந்த உத்தரவை கேட்டு அந்தக் கணவரும் அவருக்குச் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அருண் குமர் ஷர்மா அதிர்ந்து போயுள்ளனர். மேலும் இதுபோன்ற தீர்ப்புகள் திருமண சட்டத்திற்கே பாதகமாக அமையும் என்றும் இதனால் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

தொடங்கியது 'ஜெயிலர்' படத்தின் பிசினஸ்.. வெளிநாட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக

நள்ளிரவு திடீரென கணவர் மீது போலீஸ் புகார் கொடுத்த ரக்சிதா .. என்ன காரணம்?

சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா திடீரென நள்ளிரவில் காவல் நிலையம் சென்று தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீ- addict-ஆ நீங்க? உங்களுக்கான தீர்வு 'வெள்ளை-டீ'… கண்டிப்பா டிரை பண்ணுங்க…

நம்மூரில் டீ-க்கு அடிமையாகாத ஆசாமிகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் தலைவலியா? ஒரு டீ குடிப்போம்… சலிப்பா இருக்கா? ஒரு டீ குடிப்போம்… வீட்டை விட்டு வெளியே போறோமா? ஒரு குடிப்போம்

இந்த வார ஓடிடியில் 3 தமிழ்ப்படங்கள்.. அருள்நிதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் தமிழ் படங்கள் உட்பட மற்ற மொழி படங்கள் ஏராளமாக வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அருள்நிதி நடித்த படம் உள்பட 3 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன.

கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியரா இப்படி? டாப் ஆங்கிள் கவர்ச்சி புகைப்படம் வைரல்!

மலையாள சினிமாவில் வெளியான 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காட்சி நடித்து ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.