டிரம்ப் உரையில் விவேகானந்தர், சச்சின், கோஹ்லி:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் இன்று அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளார், அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி

இந்தியாவின் விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர். கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது. வறுமையில் இருந்து பல கோடி இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி, உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணம்

இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகத்தை மதிக்கும் நாடு இந்தியா. இந்தியா எங்களது இதயத்தில் இடம் பிடித்த நாடு. மகாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு சென்றதை பெருமையாக கருதுகிறேன்; உலக காதல் சின்னமான தாஜ்மகாலை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்’ இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்
 

More News

'மாஸ்டர்' இயக்குனரின் திடீர் விசிட்: பிரபல நடிகரின் மகன் ஆச்சரியம்

மாநகரம் மற்றும் 'கைதி' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கு மூன்றாவது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'கர்ணன்' படப்பிடிப்பு குறித்து தனுஷின் முக்கிய டுவீட்!

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் என்ற 'ஜகமே தந்திரம்'

ரஜினி ஆஜராவதற்கு விலக்கு? விசாரணை ஆணையம் அதிரடி முடிவு

கடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் நூறாவது நாள் போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.

அதிபர் ட்ரம்பை கட்டித் தழுவி வரேவேற்றார் பிரதமர் நரேந்திர  மோடி

அதிபர் ட்ரம்ப்பின் விமானம் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

ட்ரம்ப் வருகையால் விழாக் கோலாம் பூண்ட அகமதாபாத் – ஏற்பாடுகள், செலவுகள் குறித்த தொகுப்பு

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்