'உறியடி'யை மீண்டும் ரிலீஸ் செய்ய இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Thursday,June 09 2016]

சமீபத்தில் வெளிவந்த 'உறியடி' திரைப்படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளிவந்தாலும் விமர்சகர்கள் தந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் நல்ல ரிசல்ட்டை தந்தது. கடந்த மே 27ஆம் தேதி வெளியான இந்த படம் ஒருசில நாட்களில் சில திரையரங்குகளில் காட்சிகள் அதிகரித்தும் சில திரையரங்க வளாகத்தில் பெரிய திரையரங்குகளிலும் திரையிடப்பட்டன. கோலிவுட்டின் முக்கிய விஐபிக்கள் இந்த படம் வெற்றியடைய வேண்டிய படம் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் நாளை புதிய படங்கள் வெளியாகவுள்ளதால் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விஜயகுமார் சமூகவலைத்தளத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் தனது வேண்டுகோளில், '"அன்பு ரசிகர்களே, நீங்கள் சென்னைவாசி என்றால், உங்களுக்கு 'உறியடி' படம் பார்க்க வேண்டும் என்றால் நாளை திரையரங்கத்துக்கு செல்லுங்கள். வெள்ளிக்கிழமை ஒரு காட்சியை தாண்டி படம் நீட்டிக்கப்படுமா எனத் தெரியவில்லை.

மற்ற நகரங்களிலும் படத்தின் வெளியீட்டை விரிவுபடுத்த அதிகபட்ச முயற்சிகள் எடுத்து வருகிறோம். படத்தைப் பற்றி மக்கள் ட்விட்டர்-பேஸ்புக் போன்ற இடங்களில் பேசி, விவாதித்து, படத்தை தங்கள் ஊரில் பார்க்க விரும்புகிறார்கள் என வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிரூபித்தால் மட்டுமே படம் வெளியாகும்.

உங்கள் ஊர்களில் படம் வெளியாகுமா என நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் தான். ஆனால் முடியவில்லை. விரைவில் திரையரங்க பட்டியலை வெளியிடுகிறேன். பண்பலை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. 'உறியடி' படத்தை கொண்டு சேர்க்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டேன்” இவ்வாறு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' பர்ஸ்ட்லுக் வெளியாவது எப்போது? புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் வரும் ஜூலையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான '2.0' படத்திற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மேக்கப் டெஸ்ட் செய்துள்ளார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' ஆடியோ ரிலீஸ் தேதி

சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் சிம்புவும் அவரது ரசிகர்களும் உற்சாகமாக இருக்கும்

பேரறிவாளன் விடுதலைக்காக களமிறங்கும் கோலிவுட்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட ஏழுபேர்களை விடுதலை செய்ய, வரும் 21ஆம் தேதி வேலூர் சிறைச்சாலை முதல் சென்னை கோட்டை வரை பிரமாண்டமான பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

வில்லன்களுக்கெல்லாம் வில்லன் ரஜினி சார். கிஷோர் பெருமிதம்

சமீபத்தில் வெளியான 'கபாலி' படத்தின் டீசரில் 'யார்ரா அவன் கபாலி' வரச்சொல்லுடா அவனை' என்று அதிரடியாக வசனம் பேசி நடித்த கிஷோர்,

சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' ரிலீஸ் தேதி?

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகரான சந்தானம் சமீபத்தில் ஹீரோவாக பதவியுயர்வு பெற்று தற்போது ஹீரோவாக மட்டுமே ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.