ஒரே குடும்பத்தில் 32 பேருக்குக் கொரோனா!!! பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 32 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதிச்செய்யப் பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. பண்டா மாவட்டத்தின் புட்டா குடான் என்ற பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 32 பேருக்குக் கொரோனா உறுதிச்செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதை இந்தியச் சுகாதாரத்துறை அறிவிப்பின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. தொடக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவில் 1000 என்ற கணக்கில் இருந்த கொரோனா எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 356 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாக இந்தியச் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. உலக அளவிலும் இந்தியா கொரோனா எண்ணிக்கையில் தொடர்ந்து 3 ஆவது இடத்திலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 1045 உயிரிழப்புகள் கொரோனாவால் ஏற்பட்டு இருக்கின்றன. அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 66 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து இருக்கிறது. இதனால் 8.01 லட்சம்பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் நேற்று ஒரேநாளில் 62 ஆயிரத்து 026 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பி உள்ளனர் என்றும் ஒட்டுமொத்தமாக 29.01 லட்சம்பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 37 லட்சத்து 37 ஆயிரத்து 523 பேருக்கு உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடியில் ரிலீஸாகும் 'மாஸ்டர்' நடிகரின் அடுத்த படம்: பரபரப்பு தகவல் 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் அட்டகாசமான வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்'

விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில்: நாயகி, இயக்குனர் குறித்த தகவல் 

கோலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான விஜய்ஆண்டனி, 'நான்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகி, அதன் பின்னர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சென்னையில் முதல் நாளிலேயே மால் விசிட் அடித்த தமிழ் நடிகை

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னையில் மால்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் அனுமதியின் பேரில் நேற்று முதல் மால்கள் திறக்கப்பட்டன.

சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் தான் சுந்தர் சியின் அடுத்த படமா?

கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'ஆக்சன்' திரைப்படம் வெளியானது

ஒரே மாதத்தில் சிறுவனை 8 முறை துரத்தி துரத்தி கொத்திய பாம்பு!!! வினோதச் சம்பவம்!!!

உத்திரப்பிரதேசத்தில் ஒரு சிறுவனை பாம்பு ஒன்று 8 முறை துரத்தி துரத்தி தாக்கிய வினோதச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.