விக்ரமின் 'சாமி 2': மீண்டும் போலீஸ் கேரக்டரில் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,December 22 2017]

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க உமா ரியாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உமா ரியாஸ் ஏற்கனவே அருள்நிதியின் 'மெளனகுரு' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கணவர் ரியாஸ்கானுடன் 'சென்னை விடுதி' என்ற படத்திலும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். பெண் போலீஸ் கேரக்டர் என்றாலே ஒரு காலத்தில் விஜயசாந்தி பெயர் தான் ஞாபகம். அதேபோல் உமாரியாஸ் தொடர்ந்து பெண் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், கீர்த்திசுரேஷ், பிரபு, பாபிசிம்ஹா, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். 

More News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. விஷால் நேரில் ஆஜர்

நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சற்றுமுன்னர் நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் ஆஜரானார். நீதிமன்றத்தில் உறுதி அளித்ததற்கு மாறாக தன்னை நடிகர் சங்க பொதுக்குழுவில்

குமரி மீனவர்களுக்காக கொடை வள்ளலாக மாறிய ஜி.வி.பிரகாஷ்

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக அந்த பகுதி மக்கள் குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர்.

பிரமிப்பை ஏற்படுத்திய மெர்சல் படத்தின் கிராபிக்ஸ் மேக்கிக் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் தமிழக பாஜக தலைவர்களின் உதவியால் எதிர்பார்த்ததைவிட இருமடங்கு வசூல் செய்து விஜய்யின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்தது

இந்திய அளவில் 25வது இடத்தை பிடித்த தளபதியின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்து தகவல்களை ஒருசிலர் சர்ச்சையாக்கினர்.

'அருவி', 'அஸ்மா' இரண்டு படத்திற்கும் என்ன வித்தியாசம்: இயக்குனர் அருண்பிரபு விளக்கம்

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினர்களின் ஆதரவையும் பெற்று திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிவருகின்றது.