close
Choose your channels

கருப்புப்பண உலகின் ஒரே வெள்ளை கலைஞன் கமல். ஆஸ்கார் ரவிச்சந்திரன்

Tuesday, November 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு பொதுமக்களை மட்டுமின்றி திரையுலகிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ரிலீஸ் ஆகவேண்டிய படங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக திரையுலகில் பெரிய அளவில் சம்பளம் வாங்குபவர்கள் பாதி வெள்ளை மற்றும் பாதி கருப்பு என வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மட்டுமே முழுக்க முழுக்க வெள்ளையாக பணம் வாங்கும் கலைஞன் என பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அண்மையில் 'விஸ்வரூபம் 2' படத்திற்காக ஒருசில கோடிகள் கமலுக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் கொடுத்ததாகவும், அத்தனை பணத்தையும் செக் ஆக வங்கியில் செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு குடிமகனும் கமல்ஹாசன் போல இருந்தால் இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் கமல்ஹாசனின் கனவுப்படமான 'விஸ்வரூபம் 2' வெகுவிரைவில் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment