உடுமலை சங்கர் கொலை வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

கடந்த ஆண்டு தமிழகத்தையே குலுங்க வைத்த உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12ஆம் தேதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கல்லூரி மாணவரான சங்கர் கல்லூரி மாணவியான கவுசல்யாவை காதலித்தார். ஆனால் ஜாதியை காரணம் காட்டி இந்த காதலுக்கு கவுசல்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி சங்கர், கவுசல்யா ஆகிய இருவரும் உடுமலை பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுசல்யா பின்னர் குணமாகி நீலகிரியில் உள்ள ராணுவ கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில்  கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேர்களை கைது செய்த உடுமலை போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் நடந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்களும், கவுசல்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி அலமேலும் நட்ராஜ் தெரிவித்தார். தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலையில் கொலையாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அறிய தமிழகமே பரபரப்புடன் காத்திருக்கின்றது.

More News

நயன்தாராவிற்கு சிலை வைத்தால் திறக்க தயார்: பிரபல இயக்குனர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'அறம்' படத்தை பாராட்டதவர்களே இல்லை என்று கூறலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஊடக விமர்சகர்கள் வரை அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை இந்த படம் பெற்றுள்ளது. 100 வருட தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுகிறது.

விஜய்ன்னு பேரு வச்சாலே சூப்பர் ஆயிடுறாங்க: அண்ணாதுரை ஆடியோ விழாவில் ராதிகா

விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் ஆண்டனி, இயக்குனர் சீனிவாசன், தயாரிப்பாளர் ராதிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

சூர்யாவின் அடுத்த படத்தில் '8 தோட்டாக்கள்'' பட நடிகை

ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் நடித்த நடிகை மீரா மிதுனுக்கு சூர்யாவின் அடுத்த படத்தில்

முதல்முறையாக வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து கொண்ட கமல்-ரஜினி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் பிரபலம் என்றாலும் ஒருவர் கூறிய கருத்தை இன்னொருவர் ரீடுவீட் செய்ததோ, வாழ்த்து தெரிவித்ததோ கிடையாது

சட்டமன்ற கூட்டத்தை கட் அடித்துவிட்டு குத்தாட்டம் ஆடிய எம்.எல்.ஏ

கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த விழாவில் குத்தாட்டம் ஆடியதாக எம்.எல்.ஏ ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.