உதயநிதியின் அடுத்த படத்தின் அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,July 05 2016]

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் 50 நாட்கள் திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடியதோடு, அவருடைய நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் அவருடைய அடுத்த படத்தை பிரபல இயக்குனர் எழில் இயக்கவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் தற்போது அவரே தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தை எழில் இயக்குவது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உதயநிதி நடிக்கும் படங்களில் காமெடியனாக நடிக்கும் சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டதால் இந்த படத்தில் அவருடன் முதல்முறையாக சூரி இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சந்தானம், விவேக்கை அடுத்து சூரியுடன் இணையும் இந்த படம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்த படத்தின் நாயகி மற்றும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத்...

மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

கடந்த ஆண்டு வெளியான 'ஓகே கண்மணி' வெற்றி படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8ஆம் தேதி...

சூர்யாவின் அடுத்த இயக்குனர் முத்தையா ஓர் பா.ரஞ்சித் ? ஞானவேல்ராஜா விளக்கம்

ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நாயகிகளாக நடித்து வரும்...

'கபாலி' பிரிமியர் காட்சி இடம், தேதி, நேரம் அறிவிப்பு. ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை...

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் எப்போது? அனிருத் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் தமிழ் மற்றும் மலையாள படங்களின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்...