close
Choose your channels

சூர்யா சொன்னது அப்ப புரியல, இப்ப தான் புரியுது: உதயநிதி ஸ்டாலின்..!

Tuesday, June 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா சொன்னது அப்போது புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடந்த சினிமா விழா ஒன்றில் பேசியுள்ளார்

உதயநிதி ஸ்டாலின் நேற்று நடந்த சினிமா விழாவில் பேசும்போது ஏழாம் அறிவு திரைப்படத்தில் இடம் பெற்ற இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட வேண்டும் என்று சூர்யா என்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அப்போது அரசியல் புரிதல் எனக்கு அதிகமாக இல்லாததால் அந்த வசனத்தை நீக்காமல் விட்டுவிட்டேன் என்றும் கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ஏழாம் அறிவு. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் இட ஒதுக்கீடு குறித்த வசனம் ஒன்று இடம் பெற்றிருக்கும்.

இதுகுறித்து நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘ஏழாம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற இடஒதுக்கீடு குறித்த வசனத்தை படத்தில் இருந்து நீக்க தயாரிப்பாளர் என்ற முறையில் என்னிடம் சூர்யா கூறினார். ஆனால் அந்த வசனத்தை தான் பெரிதாக அரசியல் புரிதல் இல்லாததால் இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்னுடைய தயாரிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் இருந்திருக்க கூடாது என்பதை இப்போது நான் உணர்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment