close
Choose your channels

மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்ற உதயநிதி, பா ரஞ்சித்: காரணம் இதுதான்!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாரி செல்வராஜின் இல்லத்திற்கு நேரில் உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித் உள்பட பிரபலங்கள் சென்று வாழ்த்து தெரிவித்ததன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் ,கடந்த 2018ஆம் ஆண்டு ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமன்றி யார் இந்த மாரி செல்வராஜ்? என்று கோலிவுட்டினர் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அவருடைய முதல் படம் இருந்தது. முதல்பட வெற்றிக்கு பின் தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் சென்னையில் புது வீடு கட்டி இன்று புதிய வீட்டில் தனது குடும்பத்தினருடன் குடியேறினார். இந்த புதுமனை புகுவிழாவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக மாரி செல்வராஜின் குருவான பா ரஞ்சித் தனது குடும்பத்துடன் வந்திருந்து மாரிசெல்வராஜை வாழ்த்தினார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராம் உள்பட பல பிரபலங்கள் மாரி செல்வராஜின் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment