உதயநிதியின் 'மாமன்னன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,July 18 2023]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசை புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் ரிசல்ட் தெரியவந்துள்ளதை அடுத்து இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது. இந்த படத்தின் வசூல் 50 கோடி ரூபாயை நெருங்கி விட்டதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘மாமன்னன்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ‘மாமன்னன்’ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய அந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

பிறந்த நாளில் நற்பணி மன்றம் தொடங்கிய விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்த நாளில் அவர் தனது பெயரில் நற்பணி மன்றத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவர் பல சமூக சேவைகளும் செய்ய

திடீரென மயங்கிய பைலட்… 70 வயது பெண்மணியால் பயணிகள் உயிர்பிழைத்த சம்பவம்!

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று பயணம் செய்த நிலையில் அதன் பைலட் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.

யூடியூபருக்கு கோடிக்கணக்கில் சம்பளமா? ஐடி ரெய்டில் வசமாக சிக்கிய சம்பவம்!

ஏற்கனவே கேரளாவில் பிரபல யூடியூபர்கள் பல பேர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த நிலையில் முறையாக வருமான வரிச் செலுத்தவில்லை என்று அடுக்கடுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

27 இளைஞர்களை திருமணம் செய்த இளம்பெண்… இரவோடு இரவாக மாயமான சம்பவம்!

காஷ்மீர் பகுதியில் இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன சில நாட்களிலேயே காணாமல் போயிருக்கிறார்.

டிடிஎஃப் வாசனின் 'மஞ்சள் வீரன்' நாயகியும் யூடியூப் பிரபலமா?

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் 'மஞ்சள் வீரன்' என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பவரும் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் என்று கூறப்படுகிறது.