எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு உதயநிதி கொடுத்த உத்தரவாதம்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி அவர்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

உதயநிதி பேசியதாவது: பாகுபலி சாதனையை கண்டிப்பாக ’ஆர்.ஆர்.ஆர்’ முறியடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், கடந்த 10 வருடங்களுக்கு முன் நாங்கள் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆரம்பித்தபோது ராஜமௌலி இயக்கிய ’மகதீரா’ படத்தின் தமிழ்ப்பதிப்பான ‘மாவீரன்’ படத்தை நாங்கள் தான் ரிலீஸ் செய்தோம் என்றும், அப்போது அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார் என்றும், சத்யம் தியேட்டரில் ஒரு ஸ்கிரீனிலாவது எங்கள் படம் ரிலீஸாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்றும், அதேபோல் ‘மாவீரன்’ படத்தை சத்யம் திரையரங்கில் ரிலீஸ் செய்தோம் என்றும் கூறினார்.

இந்த முறை எங்களது ரெட் ஜெயன்ட் மூவிஸ் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் 3 ஏரியாக்களை வாங்கியுள்ள நிலையில் சத்யம் தியேட்டரில் உள்ள ஆறு ஸ்க்ரீனில் ஐந்து ஸ்க்ரீன்களில் இந்த படம்தான் போடுவோம் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன் என்று கூறினார்.

More News

கொத்து கொத்தாகச் செத்துமடிந்த 5,000 பறவைகள்… இன்னொரு பேரழிவா?

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஹுலா எனும் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டு

நாயின் ஆணுறுப்பை வெட்டி, துண்டு துண்டாக்கிய சைக்கோ சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில், தெருவில் சுற்றித்திரிந்த

120 மணிநேர ரெய்டில் 250 கோடி ரொக்கம்… இந்தியாவையே கதிகலங்க வைத்த தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த வியாபரி ஒருவரின் வீட்டில்

என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? ரசிகரின் கேள்விக்கு அஞ்சனாவின் கூல் பதில்!

தொலைக்காட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அஞ்சனா ரங்கனிடம் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு

மேலும் ஒரு தமிழ் இயக்குனருக்கு கொரோனா: அதிர்ச்சியில் படக்குழுவினர்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் திரையுலகினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.