உதயநிதி-அருண்ராஜா காமராஜ் படத்திற்கு கலைஞர் புத்தகத்தின் டைட்டில்!

  • IndiaGlitz, [Saturday,October 16 2021]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்திற்கு கலைஞர் எழுதிய புத்தகத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகரும் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண் ராஜா இயக்கத்தில் திரைப்படம் ஒன்று கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர். யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ்குமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார் என்பதும் போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த மோஷன் போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் ’நெஞ்சுக்கு நீதி’ என்று வைக்கப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதி என்பது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுதிய புத்தகத்தின் டைட்டில் என்பது அனைவரும் அறிந்ததே.

More News

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: பிரபல அரசியல் கட்சி தலைவர்!

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என்பதை கூற முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் விஜய் அரசியலுக்கு வந்தால்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது இந்த போட்டியாளரா? வாக்குகள் விபரம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் நமீதா எதிர்பாராதவிதமாக வெளியேறிவிட்ட நிலையில் 17 போட்டியாளர்கள் தற்போது வீட்டில் உள்ளனர்.

ஐபிஎல் 2021- இல் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார்?

2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்து ஒருவழியாக சென்னை சூப்பர் கிங்ஸ்

'அண்ணாத்த' படத்தின் சென்சார் தகவல்: அட்டகாசமான போஸ்டர் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்

சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு இத்தனை கோடியா? பரிசுகள் விபரங்கள்!

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில்