close
Choose your channels

பாம்பு டான்ஸ் ஆடிய இளைஞர்கள்: புதுவகை தண்டனை!

Thursday, May 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின்போது தேவையில்லாத காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியே வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கையையும் மீறி பலர் ஒரு அவசியமும் இன்றி வெளியே வந்து காவல்துறையினர்களிடம் சிக்கி தண்டனை பெற்று வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு விதியை மீறும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் புதுமையான தண்டனை அளித்து வருகின்றனர். திருக்குறள் வாசிப்பது உள்பட பல்வேறு தண்டனைகள் தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி எந்தவித காரணமும் இன்றி வீட்டை விட்டு வெளியே வந்த இரண்டு இளைஞர்களை அம்மாநில காவல்துறை பாம்பு டான்ஸ் ஆட வைத்து உள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்னராவது மற்ற இளைஞர்கள் தேவையில்லாத காரணத்திற்கு வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment