திருமணம் நடத்தி வைத்த அர்ச்சகருடன் புதுமணப்பெண் ஓட்டம்: அதிர்ச்சியில் மணமகன்!

  • IndiaGlitz, [Friday,May 31 2019]

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிரோஞ்ச் என்ற பகுதியில் கடந்த 7ஆம் தேதி ரீனாபாய் என்பவருக்கு ஒரு இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை வினோத் மஹாராஜ் என்ற அர்ச்சகர் நடத்தி வைத்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்த 16வது நாள் புதுப்பெண் ரீனாவை திடீரென காணவில்லை. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் ரீனாவின் திருமணத்தை நடத்தி வைத்த அர்ச்சகரையும் காணவில்லை என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ரீனாவுக்கும் அர்ச்சகர் வினோத்துக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் புதுப்பெண் தான் போட்டு வந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும், ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்து கொண்டு சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.

இதில் ஒரு பெரிய கொடுமை என்னவெனில் அர்ச்சகர் வினோத்துக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

என்.ஜி.கே படம் பார்ப்பவர்களுக்கு இரண்டு இன்ப அதிர்ச்சிகள்

சூர்யா நடித்த என்.ஜி.கே' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

6 மணி நேரம் பப்ஜி விளையாடிய சிறுவன் பரிதாப மரணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் மொபைல்போனில் தொடர்ந்து ஆறு மணி நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிய சிறுவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

என்.ஜி.கே' ரிலீஸ் தினத்தில் ரசிகர்களுக்கு சூர்யாவின் மெசேஜ்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில்

சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் சசிகுமார்!

நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ்நாடு அரசியலில் குதிக்கின்றாரா ஸ்ரீரெட்டி?

தமிழக அரசியல் களம் எப்போதுமே திரை நட்சத்திரங்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் என்பது தெரிந்ததே