டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

கடந்த சில நாட்களாக மன உளைச்சல் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் இன்று இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தேனி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு காவலர்கள் தங்களை எந்தவித காரணமும் இன்றி இடமாற்றம் செய்ததாகவும், இதுகுறித்து மேலதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் எந்தவித பதிலும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்த இருவரும் அதேமாவட்டத்தை சேர்ந்த துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அலுவலகத்திலும் புகார் அளித்தும், அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் மீது தண்ணீர் ஊற்றிய மற்ற காவலர்கள் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தால் டிஜிபி அலுவலகம் முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை பொங்கியது ஏன்?

தமிழிசை செளந்திரராஜன் பொதுவாக செய்தியாளர்களிடம் பேசும்போது அமைதியாக பேசுவார். ஆனால் இன்று நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று அவரே பொங்கி பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை: கவுதம் மேனன்

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அது அவருடைய உரிமை. ஆனால் நான் அவரிடம் இருந்து நல்ல திரைப்படங்களை விரும்புகிறேன்

அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

திண்டுக்கல் அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடிக்கு பதிலாக பாஜக கொடி பறந்ததால் அந்த பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு: ரஜினி வெளியிட்ட வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் அதன்பின்னர் அளித்த பேட்டியில் தனக்கு பின்னால் ஆண்டவனை தவிர யாரும் இல்லை என்று கூறியதையும் பார்த்தோம்

பாவம் அஜித்-விஜய்: கூறியது யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது குறித்து நடிகர் சித்தார்த் கூறிய கருத்தை சற்றுமுன் பார்த்தோம்.