தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பலி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது தமிழக மக்களை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசால் 102 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தமிழகம் முழுவதும் மொத்தம் 411 பேர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்று மட்டும் என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும்

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் திடீரென பலியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் தலைமையாசிரியர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். டெல்லி மத மாநாட்டுக்குச் சென்று வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார்

அதேபோல் சிதம்பரம் அரசு முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 35 வயது இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த இளைஞரும் இன்று மரணமடைந்தார். இருப்பினும் இவர்கள் இருவரது ரத்தம் மாதிரியின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் அந்த முடிவுகள் வந்தால் மட்டுமே இவர்கள் கொரோனாவால் இறந்தார்களா? என்பதை உறுதி முடியும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்

More News

இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவா? அமெரிக்க நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இயல்பு நிலை திரும்பி விடும்

வெளியே போகாதே, உயிரை போக்காதே: சீனுராமசாமியின் கொரோனா பாடல்

கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை பல திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமியின் பாடல் வரிகளில் என்.ஆர்.ரகுநாதனின் இசையில்

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் தினம் அனுசரிப்பு!!! நாடுமுழுவதும் மௌன அஞ்சலி செலுத்திய மக்கள்!!!

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவிய முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது

கொரோனாவால் உயிரிழந்தவர்களை கணக்கில் காட்டாமலே கல்லறைத் தோட்டங்களில் புதைக்கப்படும் அவலம்!!!

கொரோனா பாதிப்பின் மையங்களாக ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன என்று சொல்லப்படும் அளவிற்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

கொரோனா பரபரப்பிலும் கிளுகிளுப்பான வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரி எனப்வரை திருமணம் செய்து கொண்டார்.