ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் இணையும் 2 பிரபலங்கள்.. இருவருமே நடிப்பு அரக்கன்கள்..!

  • IndiaGlitz, [Friday,June 28 2024]

ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் இரண்டு பேருமே நடிப்பு அரக்கன்கள் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ’பென்ஸ்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்தது. இந்த படத்தை ’ரெமோ’ ’சுல்தான்’ போன்ற படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தில் தான் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் இருவருமே வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் எஸ்ஜே சூர்யா மற்றும் பகத் பாசில் என தெரிகிறது.

இருவருமே நடிப்பு அரக்கன்கள் என்பதும் எவ்வளவு பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் இவர்கள் இருவருடைய நடிப்பு மட்டும் தனியாக கவனிக்கத்தக்க வகையில் இருக்கும் என்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

More News

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. 'விடாமுயற்சி' படப்பிடிப்பு என்ன ஆச்சு?

நடிகர் அஜீத் தற்போது அஜர்பைஜானில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் திடீரென அவர் இந்தியா திரும்ப இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் உடைந்தது.. இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?

கடந்த சில நாட்களாக சென்னையின் பல பகுதிகளில் மணமகன் தேவை, மணமகள் தேவை என்ற விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது என்பதும் இந்த போஸ்டர் எதற்காக ஒட்டப்பட்டு இருக்கிறது

பாசத்துடன் தோளில் கைபோட்ட விஜய்.. மாணவியின் எதிர்பாராத ரியாக்சன்..!

தளபதி விஜய் இன்று 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தி பொன்னாடை போர்த்தி பரிசுகளையும் வழங்கி வருகிறார்.

உங்க புகைப்படம் கூகுள்ல கூட கிடைக்கல.. ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய 'கோலங்கள்' நடிகைகள்..!

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் கூகுளில் கூட கிடைக்கவில்லை என்று ரசிகர் ஒருவர் கூறிய நிலையில் அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 'கோலங்கள்' சீரியலில்

தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் வேண்டும்.. ஆளும் அரசு செய்ய தவறிவிட்டது: விஜய் பேசிய அரசியல்..!

தளபதி விஜய் இன்று 10,12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு தரும் நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அதில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது: