இரவுக்கு ரூ.25,000, பகலுக்கு ரூ.15,000: விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகள் அதிரடி கைது..!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

இரவுக்கு ரூ.25,000, பகலுக்கு ரூ.15,000 என இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனே அருகே உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் இரண்டு நடிகைகள் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அதிரடியாக அந்த நட்சத்திர ஓட்டலில் சோதனை செய்தபோது பெண்களை ஏமாற்றி விபச்சார தொழில் செய்த போஜ்புரி நடிகைகள், புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விபச்சார கும்பலை பிடிப்பதற்காக காவல்துறையினர் வாடிக்கையாளர் போல் ஆன்லைனில் புரோக்கரை அணுகினர். அப்போது அந்த புரோக்கர் 5 நட்சத்திர ஓட்டலில் அறை முன்பதிவு செய்யுமாறு தெரிவித்தார். அவர் கூறியபடி முன்பதிவு செய்த பின்னர் அந்த புரோக்கர் போஜ்புரி நடிகைகள் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இருந்த பெண்களின் புகைப்படங்களை அனுப்பினர். மேலும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க இரவு என்றால் ரூ.25,000, பகல் என்றால் ரூ.15,000 என புரோக்கர் பேரம் பேசியதாக தெரிகிறது.

இதனை அடுத்து அங்கு விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த காவல்துறையினர் அதிரடியாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரெய்டு நடத்தினர். அதில் இரண்டு நடிகைகள் மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர். மேலும் விபச்சாரத்தில் சிக்கிய அப்பாவி பெண்களை, பெண்கள் நல விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகளையும் புரோக்கரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.