டேட்டிங் செயலியால் வந்த வினை: நடிகையின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது!

  • IndiaGlitz, [Friday,March 11 2022]

டேட்டிங் செயலியில் வாடிக்கையாளர்களுக்காக தனது செல்போன் நம்பரை பதிவு செய்து வைத்திருந்த நடிகை ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து இரண்டு நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவரது வீட்டில் உள்ள பணம் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சினிமா துணை நடிகை ஒருவர் டேட்டிங் செயலியான லொகோண்டே என்ற செயலியில் தனது செல்போன் எண்ணை பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. அந்த வகையில் ஆண் நண்பர்கள் சிலர் அவரது வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டேட்டிங் செயலி மூலம் கண்ணதாசன் என்பவர் நடிகைக்கு அறிமுகமாகியுள்ளார். அவ்வப்போது நடிகையை சந்திக்க வந்த கண்ணதாசன், நடிகை வீட்டில் யாரும் இல்லை என்பதியும், நடிகை தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டை கொள்ளையடிக்க திட்டமிட்டார் .

சம்பவ தினத்தன்று தன்னுடைய நண்பர் செல்வகுமாரை அழைத்துக்கொண்டு நடிகையின் வீட்டுக்கு சென்று உள்ளார் கண்ணதாசன். ஏற்கனவே கண்ணதாசன் அறிமுகம் என்பதால் கதவை நடிகை திறந்த போது திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரை இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அவரது வீட்டில் இருந்து 50 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு மாயமானதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறையில் நடிகை புகார் செய்துள்ளதை அடுத்து சிசிடிவி காட்சியின் மூலம் விசாரணை செய்த காவல்துறையினர் கண்ணதாசன் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். சட்டத்துக்கு விரோதமாக லொகோண்டே செயலியில் தனது செல்போன் நம்பரை பதிவு செய்து ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்தது நடிகையும் குற்றமாக இருந்தாலும் அந்த நடிகையின் சம்மதமின்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

More News

தோனியுடன் வாழ்வது ரொம்ப கஷ்டம்… பகீர் கருத்தை வெளியிட்ட சாக்ஷி… என்ன காரணம்?

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின்

விருது விழாவில் நடிகை சமந்தா… இணையத்தில் தீயாய் பரவும் கிளாமர் புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சமந்தா

சந்தானம் படத்தின் ஜோடியாகும் அருண்விஜய் பட நாயகி!

அருண்விஜய் நடித்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

இந்த உலகமே மேத்தமெட்டிக்ஸ்ல தான் இயங்குது: 'குதிரைவால்' டிரைலர்

இந்த உலகமே மேத்தமெட்டிக்ஸ்ல தான் இயங்குகிறது என்ற வசனத்துடன் பா ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரைவால்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

மாசக்கடைசியில இவன் தான் சோறு போடுவான்: ஓட்டல் முதலாளிக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்

கடந்த 2010 களில் வறுமையில் இருந்த போது இவன் தான் எனக்கு சோறு போடுவான் என ஓட்டல் முதலாளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்