சீன பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் இந்தியர்கள்: யாருக்கு நஷ்டம்?

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

இந்தியா மற்றும் சீனா எல்லையில் சமீபத்தில் நடந்த தாக்குதலை அடுத்து இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை அடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சீனா திட்டமிட்டு இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்களை தாக்கி உயிர் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக சீன பொருட்களை வாங்கக் கூடாது என்றும், டிக்டாக் உள்ளிட்ட எந்த சீன செயலிகளை இனி பயன்படுத்தக் கூடாது என்றும், சீனாவில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யக்கூடாது என்றும் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிவி ஒன்றை மாடியில் இருந்து தூக்கி எறிந்து உடைப்பதும், அதை அங்கிருந்த பலர் காலால் மிதித்து அடித்து நொறுக்குவதுமான காட்சி உள்ளது.

இதுகுறித்து டிவிட்டர் பயனாளிகள் கூறும் போது ’சீன பொருள்களை இனிமேல் வாங்கக்கூடாது என்று சபதம் எடுக்கலாம். ஆனால் ஏற்கனவே வாங்கிய பொருட்களை உடைப்பதால் சீனாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பொருளை வாங்கியவர்களுக்குத்தான் நஷ்டம். எனவே இது மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

அவர் கூறியதுபோல் ஏற்கனவே சீனப் பொருட்களை பணம் கொடுத்து வாங்கிய நிலையில் அந்த பொருட்களை உடைப்பதால் பொருளுக்கு உரியவர் தான் நஷ்டம் அடைவர். எனவே இனிமேல் சீனாவின் பொருட்களை வாங்காமல் இந்திய பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று உறுதி எடுத்தாலே போதும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

வந்துவிட்டது... கொரோனா வைரஸை கொல்லும் அதிநவீன முகக்கவசம்!!!

உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கின்றனர். ஆனால் இதுவரை தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் பட வில்லை.

கௌதம் மேனனுடன் முதல்முறையாக இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோலிவுட் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்திலும் பிஸியாக இருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன் மட்டுமே

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற பதவிக்கான தேர்தல்: மெகா வெற்றிப்பெற்ற இந்தியா!!!

ஐக்கிய நாடுகளின் சபையின் வலிமை மிக்க பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

சென்னையில் ஊரடங்கு: தென்னிந்திய நடிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகம் என்பதால் இந்த நான்கு மாவட்டங்களிலும் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு

இன்று நள்ளிரவு முதல் சென்னையில் முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கலாம்?

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.