மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட பலி.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நிகழ்ந்த நிலையில் அதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

 

More News

'மகாராஜா' வெற்றிக்காக இயக்குனர் நிதிலனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.. வைரல் புகைப்படம்..!

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தற்போது மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது

'மெய்யழகன்' இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படம்.. ஆச்சரியம் அடைந்த கார்த்தி..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96', கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த 'மெய்யழகன்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ள நிலையில், இரண்டு படங்களுமே

யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த குக் வித் கோமாளி ஸ்ருதிகா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்று தொடங்கியது. இந்நிலையில், நேற்று தான் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 தொடங்கியது என்பதும், இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி

என் பெட்-ஐ உங்களுக்கு கொடுத்துடறேன்.. 4 வாரம் நாமினேஷன் பண்ணாதிங்க: பேரம் பேசிய ஜாக்குலின்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது, ஜாக்குலின் புலம்பல்

ஹை ஸ்பீடில் கார்த்திக் சுப்புராஜ்.. 'சூர்யா 44' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.