'ரஞ்சிதமே' சீரியல் நடிகர் புற்று நோயால் பாதிப்பு.. பிரார்த்தனை செய்யுமாறு மகள் வேண்டுகோள்..!

  • IndiaGlitz, [Monday,July 22 2024]

பிரபல சீரியல் நடிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவரது மகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ரஞ்சிதமே’ என்ற தொடரில் நடித்து வந்தவர் நேத்ரன். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவரது மனைவி தீபாவும் சீரியல் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

நேத்ரன் - தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகள் அபிநயா ’கனா காணும் காலங்கள்’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் என்பதும் அவர் அந்த தொடரின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எனது தந்தைக்கு உடல் நலம் இல்லை என்ற கேள்விப்பட்டவுடன் மருத்துவமனையில் அட்மிட் செய்தோம், ஆனால் அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் என்று கூறிவிட்டார்கள், சர்ஜரி செய்திருந்த போதும், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், மறுபடியும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

என் அப்பா குணமடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தால் அந்த பாசிட்டிவிட்டி காரணமாக அவர் குணமாகி விடுவார் என்று நம்புகிறேன். எனவே அப்பா குணம் ஆக வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் கண்டிப்பாக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், உங்கள் அப்பா விரைவில் மீண்டும் வருவார்’ என்று கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ’ரஞ்சிதமே’ தொடரிலிருந்து நேத்ரன் விலகியபோது அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. தற்போது தான் அவர் உடல் நலக் குறைவு காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.