3 வயது குழந்தையின் உயிரைப்பறித்த டிவி!!! பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

 

சென்னையின் தாம்பரம் அடுத்த சேலையூரில் டிவி மேல் இருந்த செல்போனை எடுக்க முயன்றதால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலையூரின் அகரம் அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவர் தன்னுடைய செல்போனை எப்போதும் ஜார்ஜரில் போட்டு டிவி மேல் வைப்பது வழக்கமாம். பாலாஜியும் அவரது மனைவியும் வெளியில் பேசிக் கொண்டிருந்தபோது அந்தச் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதனால் குழந்தை கவியரசு வேகமாக செல்போனை எடுக்க முயன்றிருக்கிறார்.

குழந்தை வேகமாக செல்போனை எடுக்க முயன்றபோது சார்ஜர் வயர் டிவியோடு சேர்த்து இழுத்துக் கெண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைமீது டிவி விழுந்ததால் குழந்தை உடனே கதறி அழுதிருக்கிறது. வெளியே இருந்த பாலாஜி ஓடிவந்து பார்த்திருக்கிறார். குழந்தை மயங்கிய நிலையில் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும், பலகைகளை கொண்டு அடுக்கப்பட்ட கட்டைகளின் மீது டிவி வைக்கப்பட்டதால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. டிவியோடு சேர்த்து இந்தக் கட்டைகளும் குழந்தை மீது விழுந்ததாகவும் அதனால் 3 வயது குழந்தையின் உயிர் பறிபோனதாகவும் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

More News

பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது

கொரோனா மரபணுவில் மாற்றம்-10 மடங்கு தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் பரவுவதாகப் பரபரப்பு!!!

கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஒன்றே இறுதித் தீர்வாக நம்பப்படுகிறது.

தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது: வேதாந்தா கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஆலைக்கு தடை விதித்தது

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் திடீர் மரணம்: கதறியழுத சீரியல் நடிகையின் வீடியோ

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் ஒருவர் திடீரென மரணம் அடைந்து விட்டதை அடுத்து அந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் கண்ணீருடன் கதறி அழுத வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஜிவி பிரகாஷ் பட நாயகியின் டுவிட்டர் பக்கம் ஹேக்: பரபரப்பு தகவல்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்த நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது