திருப்புமுனையாக மாறிய அஸ்வினின் 'மன்கட் ரன் அவுட்' விக்கெட்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கொடுத்த 185 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி வந்தது. இந்த அணியின் பட்லர் மிக அபாரமாக விளையாடி வந்தார். 43 பந்துகளில் 69 ரன்கள் அடித்திருந்த பட்லர் திடீரென அஸ்வினால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதாவது அஸ்வின் பந்துவீசுவதற்கு முன்னரே பட்லர் க்ரீசை விட்டு வெளியேறியதால் அஸ்வின் ரன் அவுட் செய்தார்.

இந்த ரன் அவுட் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்தவிதமான ரன் அவுட்டுக்கு மன்கட் அவுட் என்று பெயர். அதாவது ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் இதுபோன்ற சமயங்களில் பேட்ஸ்மேனை எச்சரிக்கை மட்டுமே செய்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியபோது இதே அஸ்வின் இதேபோன்ற ரன் அவுட் ஒன்றை செய்தார். ஆனால் அப்போது கேப்டனாக இருந்த சச்சின் பெருந்தன்மையுடன் அந்த ரன் அவுட் தேவையில்லை என்று அறிவித்தார்.

ஆனால் நேற்றைய பட்லரின் ரன் அவுட் காரணமாக ராஜஸ்தான் அணி நிலைகுலைந்தது. 109 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த ராஜஸ்தான் இந்த ரன் அவுட்டுக்கு பின் வெறும் 62 ரன்களில் 7 விக்கெட்டுக்களை இழந்தது. இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியும் அடைந்தது

அஸ்வினின் ரன் அவுட் விதியின்படி இருந்தாலும் பட்லரை அவர் சதி செய்து வீழ்த்தியுள்ளதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அஸ்வினுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவாகி வருகிறது. மொத்தத்தில் நேற்றைய ரன் அவுட் இனிவரும் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது

More News

'நட்பே துணை' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசையை முறுக்கு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்திருக்கும் அடுத்த படம் 'நட்பே துணை'. குஷ்புவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும்

ஆண் நண்பருடன் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

ஃபேஸ்புக் நட்பின் மூலம் கல்லூரி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் நாசமான அதிர்ச்சி சம்பவத்தில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில்

பாஜக வேட்பாளராகும் கமல்-விஜயகாந்த் பட நாயகி!

கமல்ஹாசன் நடித்த 'சலங்கை ஒலி', தசாவதாரம்', 'விஜயகாந்த் நடித்த 'ஏழை ஜாதி', உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதா, பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மாத்திரை சாப்பிட்டு நயன்தாரா படம் பாருங்கள்: ராதாரவிக்கு சமந்தா ஆலோசனை

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து நேற்று திரையுலகினர்களை மட்டுமின்றி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது