தோஷம் கழிக்க 13 வயது சிறுவனுடன் திருமணம்… பெண் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

  • IndiaGlitz, [Thursday,March 18 2021]

திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ, பெண்ணோ தங்களுக்கு ஏதோ தோஷம் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பிவிடுகின்றனர். இதற்கு மத நம்பிக்கைகளும் ஒரு பெரும் காரணமாக அமைந்து இருக்கிறது. இப்படியான நம்பிக்கையை கொண்டு இருக்கிற பெண் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 13 வயது சிறுவனை திருமணம் செய்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் பஸ்தி பவா சேல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து இருக்கிறது. இதைப் பார்த்த உறவினர் ஒருவர் தோஷம் கழிக்க வேண்டும். இதற்காக மைனர் சிறுவனுடன் ஒரு முறை சடங்கு திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்துவிடும் எனக் கூறியிருக்கிறார். இதை முழுமையாக நம்பிய அந்தப் பெற்றோரும் இந்தக் காரியத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இதற்காக தன்னிடம் பயின்ற 13 வயது சிறுவன் ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார் அந்தப் பெண் ஆசிரியை. மேலும் திருமணச் சடங்குக்காக அச்சிறுவனின் பெற்றோரிடம் ஸ்பெஷல் கிளாஸ் எனக் கூறி வீட்டிலேயே ஒருவாரம் தங்க வைக்கவும் அனுமதி பெற்று இருக்கிறார். இந்நிலையில் அந்த பெண் ஆசிரியர் 13 வயது சிறுவனுடன் திருமணமும் செய்து கொண்டு இருக்கிறார். மேலும் இத்திருமணத்தில் மெஹந்தி, முதலிரவு சடங்குகளும் இடம்பெற்று இருக்கிறது. அதோடு திருமண முறிவு எனக்கூறி அச்சிறுவனை வீட்டிற்கும் அனுப்பி வைத்துளளனர்.

இப்படி வீட்டிற்கு திரும்பிய சிறுவன் தனக்கு பெண் ஆசிரியருடன் நடந்த அனைத்து சடங்குகளையும் தெரிவித்து இருக்கிறான். இதைக் கேட்டு அதிர்ந்துபோன அச்சிறுவனின் பெற்றோர் உடனடியாக காவல் துறையை அணுகி புகார் கொடுத்து உள்ளனர். பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் புகாரை சிறுவனின் பெற்றோர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தோஷத்தை நம்பி 13 வயது சிறுவனுடன் ஆசிரியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

தஞ்சையில் மேலும் ஒரு  பள்ளியில் கொரோனா பாதிப்பு!  

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் மகளிர் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கமலை அநாகரிகமாக பேசிய  செந்தில் பாலாஜி..! வலுக்கும் எதிர்ப்புகள்...!

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து அவதூறாக பேசிய கருத்துக்கள்

சிம்ரனை அடுத்து 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான 'அந்தகன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவர்கள் தான் பாஜகா-வின்  பரப்புரையாளர்கள்...!  வெளியான லிஸ்ட்...!

ஏப்ரல்-6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரியில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்காகவும்,

'டெடி' படத்தில் பொம்மையாக நடித்தது யார்? ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர்!

ஆர்யா, சாயிஷா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி இமான் இசையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திரைப்படம் 'டெடி'. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது