2ஜி வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது: டிடிவி தினகரன்

  • IndiaGlitz, [Thursday,December 21 2017]

இந்தியாவையே பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் சற்றுமுன்னர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது தனக்கு மகிழ்ச்சி என்றும், தமிழர்களாக இருந்து விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எதிர்க்கட்சியினர் என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறுகையில், '2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். இதே கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அவர்களும் கூறியுள்ளார்.

2ஜி வழக்கில் நியாயம் வென்றுள்ளது; இனி எல்லாமே வெற்றிதான் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது, ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும்' என்று பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

 

More News

கனிமொழி, ராசா விடுதலை : 2ஜி வழக்கில் அதிரடி தீர்ப்பு

நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய 2ஜி வழக்கில் சற்றுமுன்னர் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒபிசைனி முதலில் தீர்ப்பின் சாரம்சத்தை வாசித்தார்.

இளம் இயக்குனரின் வேண்டுகோளுக்கு தமிழ் ராக்கர்ஸின் ரியாக்சன்

இளம் இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

ஏ.ஆர்.ரஹ்மானின் 9.09 ரகசியம் என்ன தெரியுமா?

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று இரவு 9.09 மணிக்கு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் நயன்தாரா. மோகன்ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'.

சூர்யாவுக்கு ஜோடியாகும் டீச்சர் நடிகை

சூர்யா நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கும் படம் ஒன்றை பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே