ஆர்.கே.நகரில் முதல் சுற்றில் டிடிவி தினகரன் முன்னிலை

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உள்ள 4 தபால் ஓட்டுக்களில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பதிவானது. அந்த ஒரு ஓட்டும் திமுகவுக்கு கிடைத்தது

இந்த நிலையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் தகவலின்படி டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். டிடிவி தினகரன் முதல் சுற்றில் 2601 வாக்குகளும், மதுசூதனன் 647 வாக்குகளும், மருதுகணேஷ் 361 வாக்குகளும், கருநாகராஜன் 6 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் அவர்களுக்கு முதல் சுற்றில் ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

முதல் சுற்றின் முடிவிலேயே டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் உள்ள மதுசூதனைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

More News

'வேலைக்காரன்' முதல் நாள் வசூல் விபரம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில்

சென்னையை அடுத்து மதுரையிலும் நம்ம அணி போட்டியிடும்: ஞானவேல்ராஜா

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா,

கருணாநிதி உருவத்தில் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் பார்த்தேன்: மயில்சாமி

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி பூரண ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வரும் நிலையில்

இந்த படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்: பிரகாஷ்ராஜ்

தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நேற்று வெளியான 'வேலைக்காரன்' படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

பீகார் கொள்ளை கும்பலை பிடிக்க உதவிய நடிகை நயன்தாரா

பாஜக தலைவர் ஒருவரின் விலையுயர்ந்து செல்போனை திருடிய கொள்ளை கும்பலை பிடிக்க அம்மாநில போலீசார் நயன்தாராவின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது.