தினகரன் போட்டி: மீண்டும் ஆர்.கே.நகரில் கொட்டப்போகும் பணமழை

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

சென்னை ஆர்.கே.நகரின் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது முதல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகியுள்ளன. இந்த தேர்தலில் அதிமுகவின் சின்னத்தை பெற்றுள்ள ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்கவுள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தொப்பி சின்னம் கிடைக்காவிட்டால் எந்த சின்னம் கிடைத்தாலும் அதில் போட்டியிடுவேன். சின்னத்தை விட வேட்பாளர்தான் முக்கியம். இந்த நேரம் நெருக்கடியான நேரம் என்பதாலே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்று கூறியுள்ளார்

கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பின்போது தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் பணத்தை தண்ணீராக இறைத்த கதை அனைவரும் அறிந்ததே. இந்த முறையும் தினகரன் போட்டியிடுவது உறுதி என்பதால் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு மீண்டும் ஒருமுறை அதிர்ஷ்டம் அடித்திருப்பதாக கருதப்படுகிறது.

 

More News

மணிரத்னம் படத்தின் முக்கிய பணி இன்று முதல் ஆரம்பம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

கமல் மீது வழக்குப்பதிவா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் 'இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வெற்றி பெறாவிட்டாலும் சொன்ன சொல்லை காப்பாற்றிய சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றால் அந்த பணத்தின் மூலம் பொதுமக்களுக்கு நூலகம் ஒன்றை கட்டித்தர வேண்டும்

நாச்சியார் பட விவகாரம்: ஜோதிகா, பாலா மீது நீதிமன்றத்தில் வழக்கு

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

திருமணத்திற்கு பின்னர் நமீதா நடிப்பாரா? கணவர் வீரா பதில்

நடிகை நமீதா-வீரா திருமணம் இன்று காலை திருப்பதில் சிறப்பாக நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திரையுலகினர் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.