மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலமா?

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

டிடிஎப் வாசன் நடிக்க இருந்த ’மஞ்சள் வீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக இயக்குனர் செல்அம் என்பவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ’மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

’மஞ்சள் வீரன்’ படத்தின் படப்பிடிப்பில் டிடிஎப் வாசன் சரியாக கலந்து கொள்ளவில்லை என்றும் அதனால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக இயக்குனர் செல்அம் என்பவர் கூறிய நிலையில், அதற்கு டிடிஎஃப் வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து விலக வேண்டும் என்று என்னிடம் சொல்லி இருந்தால், நானே விலகி இருப்பேன். ஆனால் படப்பிடிப்பை நடத்தாமலேயே நான் படப்பிடிப்புக்கு வரவில்லை என்று கூறியது மிகப்பெரிய தவறு. மலிவான விளம்பரத்திற்காக என்னுடைய பெயரை அவர் பயன்படுத்தியது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, இது போன்ற ஒரு பச்சை துரோகத்தை நான் பார்த்ததே இல்லை, என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ’மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கூல் சுரேஷ் இதுவரை காமெடி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதை அடுத்து அவரது நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

'தங்கலான்' ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்..!

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'தங்கலான்' திரைப்படம்

சூர்யாவின் 45வது படம்.. லொகேஷன் பார்க்க தொடங்கிய இயக்குனர்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில், அவருடைய 45வது படத்தை இயக்கும் இயக்குநர் லொகேஷன் பார்க்கும்  புகைப்படத்தை தனது

சென்னை மெரினாவில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தவெக உறுப்பினர்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஐந்து பேர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அ

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ஷாலினி.. இதுதான் காரணமா?

அஜித்துக்கு, அவரது மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விவாகரத்தில் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு உடன்பாடு இல்லையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இருவருமே ஆஜராகவில்லை