ஸ்ருதிஹாசன் பாணிக்கு மாறும் த்ரிஷா

  • IndiaGlitz, [Sunday,March 06 2016]

பழம்பெரும் நடிகைகளான கே.பி.சுந்தரம்பாள், பானுமதி, வரலட்சுமி உள்பட ஒருசில நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் சொந்தக்குரலில் டப்பிங் பேசுவது மட்டுமின்றி பாடல்களையும் அவர்களே பாடுவார்கள். காலப்போக்கில் தமிழ் சினிமாவில் பிற மாநிலங்களை சேர்ந்த நடிகைகள் அதிகளவு அறிமுகமானதால் நடிகைகள் சொந்தக்குரலில் டப்பிங் பேசும் பழக்கம் கூட இல்லாமல் போனது.

ஆனால் இந்த நிலை தற்போது மாறி வருகிறது. பிரபல நடிகைகளான நயன்தாரா, சமந்தா, தமன்னா, த்ரிஷா ஆகிய நடிகைகளே சொந்தக்குரலில் டப்பிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் த்ரிஷா ஒருபடி மேலே போய் தான் நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

த்ரிஷா தற்போது நடித்து வரும் த்ரில் படமான 'நாயகி படத்தில் அவர் ஒரு பாடலை பாடவுள்ளதாக செய்திகள் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளன. இந்த படத்தை த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரிக்க கோவி என்பவர் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் ஆகியோர் பாடகிகளாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் த்ரிஷாவும் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேர்தல் பிரச்சாரத்தில் ரஜினியுடன் இணைந்த சூர்யா

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த வரிசையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வரும் சினிமா வசனங்களின் மீமிஸ்கள் இளை&#

விஜய்-அஜித் பாணியில் களமிறங்கும் பவன்கல்யாண்

தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகிற்கு இடையே எப்போது ஒரு பந்தம் உண்டு. கமல், ரஜினி படங்கள் தெலுங்கில் ஹிட் ஆவதும் சிரஞ்சீவி போன்ற தெலுங்கு நடிகர்கள் படம் தமிழில் ஹிட்டாவதும் அறிந்ததே....

கலையரசன் - காளிவெங்கட் நடிப்பில் இன்னொரு ’ஆண்பாவம்’?

பாண்டியராஜன் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த முதல் படம் 'ஆண்பாவம். இரண்டு சகோதரர்களுக்கு இடையே உள்ள ஜாலியான பிரச்சனைகள் மற்றும் காதல் கலந்த நகைச்சுவைப்படமான இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. தற்போது இதே பாணியில் 'ராஜா மந்திரி என்ற டைட்டிலில் ஒரு படம் உருவாகியுள்ளது....

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் ரஜினி-ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் தீம் பார்க் ஒன்றில் நடைபெற்று வருவதாகவும்,...

'வசூல் ராஜாவ்'வுக்கு பின் இணையும் கமல்-பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் ஏற்கனவே ஒரிரு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் 'மீன்குழம்பும் மண்பானையும்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்....