த்ரிஷாவின் 3ஆம் வகுப்பு ரேங்க் கார்டு.. எவ்வளவு க்யூட்டாக இருக்கின்றார் பாருங்கள்!

  • IndiaGlitz, [Friday,January 06 2023]

தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக இன்றளவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகிய இருவர் மட்டுமே. இவர்களில் த்ரிஷாவின் மூன்றாம் வகுப்பு ரேங்க் கார்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்ந்த 20002ஆம் ஆண்டில் சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. அதன் பிறகு அவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். அது மட்டுமின்றி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரிலும் அவர் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் நடித்த குந்தவை தேவி கேரக்டர் மிகவும் சிறப்பாக இருந்தது என்பதும், இந்த கேரக்டரில் நடித்ததற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த்ரிஷா தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் பள்ளியில் தான் த்ரிஷாவும் படித்தார் என்பதும் அவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கொடுத்த ரேங்க் கார்டு புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் அவருடைய குழந்தைப் பருவ புகைப்படம் இருக்கும் நிலையில் அந்த க்யூட் புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.