close
Choose your channels

'குட் பேட் அக்லி' ஸ்பெயின் படப்பிடிப்பில் இருந்த த்ரிஷா.. திடீரென சென்னை திரும்பியது ஏன்?

Thursday, October 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் நிலையில், இந்த படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் சென்னை திரும்பி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த த்ரிஷா திடீரென சென்னை திரும்பி உள்ளார்.

இங்கு அவர் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால், சென்னை திரும்பி உள்ளதாகவும், அந்த விளம்பரத்தில் நடித்து முடித்தவுடன் அவர் மீண்டும் ஸ்பெயின் சென்று ’குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, த்ரிஷா அஜித்துடன் ’விடாமுயற்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பதும், அந்த படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ மோகன்லால் உடன் ’ராம்’, கமல்ஹாசன் உடன் ‘தக்லைஃப்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment