close
Choose your channels

மதுரையில் நடந்த உண்மைக்கதை படத்தில் த்ரிஷா: இயக்குனர், டைட்டில் அறிவிப்பு!

Tuesday, April 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது கூட இளம் நடிகைகளுக்கு இணையாக 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பொன்னியின் செல்வன் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்திற்கு ’தி ரோடு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் 50 நாட்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், நாகூரான் படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment