மதுரையில் நடந்த உண்மைக்கதை படத்தில் த்ரிஷா: இயக்குனர், டைட்டில் அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது கூட இளம் நடிகைகளுக்கு இணையாக 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பொன்னியின் செல்வன் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்திற்கு ’தி ரோடு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் 50 நாட்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், நாகூரான் படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர்.

More News

சந்தானம் நடிக்கும் முதல் மும்மொழி திரைப்படம்: நாயகி அறிவிப்பு

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்கள் தற்போது பான் இந்திய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் நடிகர் சந்தானம் முதல் முதலாக மும்மொழி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

சென்னை காவல்துறைக்கு சூர்யா செய்த மகத்தான உதவி: குவியும் வாழ்த்துக்கள்

சென்னை காவல் துறைக்கு சூர்யா செய்த மகத்தான உதவியை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

'நம்ம பிக்பாஸ் மதுவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் .

 காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது: பிரபல இயக்குனர் அதிர்ச்சிதகவல்

பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது என பிரபல இயக்குநர் உறுதி செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

பீஸ்ட்' குழுவினர்களுக்கு விஜய் வைத்த பார்ட்டி: வைரல் புகைப்படம்

 தளபதி விஜய் நடித்த பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும், இந்த படம் வசூல் அளவில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம்