விஜய்சேதுபதி, ஆர்யாவுடன் இணைந்த த்ரிஷா

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

கடந்த வாரம் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வசூலில் சாதனை செய்து வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் எந்த பெரிய படமும் வெளியாகவில்லை என்பதால் இந்த இரண்டு படங்களும் அடுத்த வாரம் வரை வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜூலை 27ஆம் தேதி விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' மற்றும் ஆர்யாவின் 'கஜினிகாந்த்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இந்த படங்களின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மோகினி' திரைப்படமும் அதே ஜூலை 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய்சேதுபதி, ஆர்யா படங்களுடன் த்ரிஷாவின் படமும் இணைந்து வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

More News

பிரபல சின்னத்திரை நடிகை சென்னையில் தற்கொலை

கடந்த சில மாதங்களாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில்...

17 பேர்களுக்கு ஆதரவாக ஆஜராக்கும் வழக்கறிஞர் யார்? பார் சங்க தலைவர் பேட்டி

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 12 வயது சிறுமியை மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கும் 21 மிருகங்கள் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளன.

'தமிழ்ப்படம் 3' சாத்தியமா? இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதில்

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி எதிர்பார்த்த வசூலைவிட அதிக வசூலை குவித்து வருகிறது.

முடிவுக்கு வந்தது சிவகார்த்திகேயனின் முதல் படம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதும் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள்

சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர்களுக்கு அடி-உதை: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 21 பேர் கொண்ட ஒரு கும்பல் சுமார் 7 மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.