'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின்போது த்ரிஷாவுக்கு காயமா? அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,October 04 2022]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் மொத்தம் 500 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே தங்கள் கேரக்டரில் ஒன்றி தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது என்பதும் நாவலில் படித்த குந்தவை கேரக்டரை த்ரிஷா நம் கண்முன் திரையில் தோன்றியதை அனைவரும் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பின்போது த்ரிஷாவுக்கு காயம் ஏற்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். ஒரு முக்கிய காட்சியின் படப்பிடிப்பின்போது தனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அருகில் நின்றிருந்த சோபியாவுக்கு காதில் ரத்தம் வந்தது என்றும் அவர் தெரிவித்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் தான் தொடர்ந்து நடித்ததாகவும் த்ரிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் த்ரிஷா ஆக்ஷன் காட்சிகளில் நடித்து உள்ளார் என்றும் அவர் குதிரை சவாரியும் செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காட்சிகளெல்லாம் முதல் பாகத்தில் இல்லாததால் இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவின் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரகசியமாக நடந்த ராஜ்கிரண் மகள் திருமணத்தை உலகமே அறிய நடத்தி வைத்தது யார் தெரியுமா? வீடியோ வைரல்

நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணம் தற்போது உலகமே அறிய நடத்தி வைக்கப்பட்ட வீடியோ

3 மொழிகளில் தனுஷின் அடுத்த படம்: படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான 'வாத்தி' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது

'பொன்னியின் செல்வன்' இளவயது நந்தினி கேரக்டரில் இந்த குழந்தை நட்சத்திரமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது என்பது தெரிந்ததே. இதனால் சின்ன சின்ன கேரக்டர்கள்

மஞ்சுவாரியரை அழகாக ஆட வைத்த பிரபுதேவா.. 7 மொழிகளில் உருவாகும் படத்தின் பாடல்!

தமிழ் உள்பட ஏழு மொழிகளில் உருவாகி வரும் படம் ஒன்றின் பாடலுக்கு மஞ்சு வாரியாரை அழகாக ஆடவைத்து நடன இயக்குனர் பிரபுதேவாவின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. 

துருவ் விக்ரம் - ரோஜா மகள் இணைந்து நடிப்பது உண்மைதானா? ஆர்கே செல்வமணி விளக்கம்!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷூகா மாலிகா நாயகியாக நடிக்க இருப்பதாகவும்