டி.ராஜேந்தரின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

தமிழகத்தில் நாளுக்கு ஒரு கட்சி என்ற விகிதத்தில் அரசியல் கட்சிகள் பெருகி கொண்டே போகும் நிலையில் இன்று மேலும் ஒரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.

ஏற்கனவே டி.ராஜேந்தர் பிப்ரவரி 28ஆம் தேதி முக்கிய அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே கூறிய நிலையில் இன்று அவர் புதிய கட்சியை தொடங்கும் அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

அவருடைய புதிய கட்சியின் பெயர் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம். சற்றுமுன்னர் அவர் தனது கட்சியின் பெயரை அறிவித்து ஒரு நீண்ட அறிக்கையையும் பத்திரிகையாளர் முன் வாசித்து வருகிறார்.

டி.ராஜேந்தரின் கட்சியின் பெயர் பலகையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்றுள்ளன். மேலும் இதில் கட்சியின் கொடியும் உள்ளது. மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ள டி.ராஜேந்தர் மக்கள் மன்றத்தின் முன் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைது செய்யப்பட்டபோதே தமிழகத்தில் அடுத்த கைது ப.சிதம்பரம் தான் என்று பேட்டி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார்.

கார்த்திக் சிதம்பரம் அதிரடி கைது: அவசரமாக இந்தியா திரும்புகிறார் சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்லின் மகன் கார்த்திக் சிதம்பரம் சற்றுமுன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்படும் ஜெயெந்திர சரஸ்வதி அவர்கள் சற்றுமுன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

'சூர்யா 36' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எஸ்.ஆர்.பிரபு

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

என்பார்மிங் முடிந்தது: துபாய் விமான நிலையத்தில் ஸ்ரீதேவி உடல்

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவி உடல் துபாய் போலீசாரின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.