விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு டிராபிக் ராமசாமி உதவியா?

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

பிரபல சமூக சேவையாளர் டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் நடிகை ரோஹினி, டிராபிக் ராமசாமியின் மனைவியாகவும், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், சீமான், குஷ்பு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர்

இந்த நிலையில் டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா என்பவர் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் 'இந்த படத்தின் கிளைமாக்ஸில் டிராபிக் ராமசாமி தனது அரசியல் வாரீசாக விஜய்யை கைகாட்டுவதாகவும், விஜய் ஒரு மாடர்ன் காந்தி என்று கூறுவது போன்ற காட்சி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமியின் செல்வாக்கு மற்றும் நேர்மையான இமேஜை விஜய்யின் அரசியல் வருகைக்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் பாத்திமா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் பாத்திமாவின் இந்த கருத்தை அருகில் இருந்த டிராபிக் ராமசாமி மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த கருத்தை கூறிய பாத்திமாவை டிராபிக் ராமசாமி அடிக்கும் காட்சியின் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படத்தில் பாத்திமா சொல்வது போல் அப்படியொரு காட்சி இல்லை என்று படக்குழுவினர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

More News

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சூப்பர் கேரக்டரில் விஜய்சேதுபதி

முதல்படமான 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவருடைய அடுத்த படமான 'சூப்பர் டீலக்ஸ்'

குதிரைக்கு தெரியுமா காவிரி பிரச்சனை? மெரினாவில் ஏமாந்த போலீசார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த போதிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் ஒரு மெரினா போராட்டம் நடத்த வேண்டும் என்று முகநூல் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

காவிரிக்காக போராடி மெரீனாவில் கைதானாவர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

இன்று மாலை சுமார் 30 பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து திடீரென காவிரி குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர்.

சென்னையில் சிஎஸ்கே போட்டிகான டிக்கெட்டுக்கள் எப்போது கிடைக்கும்

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கவுள்ளதால்

கமல்ஹாசனை முந்தினார் சரத்குமார்

தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடி வருகின்றனர்.