நாளை 'பொன்னியின் செல்வன்' பார்க்கும் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் விருந்து!

  • IndiaGlitz, [Thursday,September 29 2022]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை நாளை திரையரங்குகளில் பார்க்கும் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 30-ஆம் தேதி அதாவது நாளை மணிரத்னம் இயக்கத்தில் உருவான பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ திரையரங்குகளில் உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது

இந்த படத்தை பார்க்க உலகமே காத்திருக்கிறது என்பதும், குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகிய நடிகர்களின் ரசிகர்களும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை பார்க்கும் கார்த்தி ரசிகர்களுக்கு நாளை டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ’சர்தார்’ படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாகவும் இந்த டீசர் நாளை ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இடைவேளையின்போது திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது

அதேபோல் தனுஷ் நடித்த ’நானே வருவேன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் நாளை இந்த படத்தின் இடைவேளையின் போதும் ’சர்தார்’ படத்தின் டீசர் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.

வரும் தீபாவளியன்று வெளியாக உள்ள ’சர்தார்’ திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் அதேபோல் நடிகை லைலா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஎஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.