தக்காளி வியாபாரத்தில் 20 நாட்களில் ரூ.30 லட்சம் லாபம்.. வியாபாரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி முடிவு..!

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

தக்காளி வியாபாரம் செய்த வியாபாரி ஒருவர் 20 நாட்களில் ரூ.30 லட்சம் லாபம் ஈட்டிய நிலையில் அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தக்காளி விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை ஏற்பாடு செய்யும் வியாபாரிகள் உட்பட ஒரு சில அபூர்வமான செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற பகுதியில் ராஜசேகர் ரெட்டி என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை அறுவடை செய்து 20 நாட்களில் 30 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் தனது தோட்டத்தில் தக்காளியை பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் நேற்று கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது தோட்டத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தக்காளி விற்பனை மூலம் அவர் சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்க கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

More News

சர்வதேச அளவில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த புது சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சர்வதேசப் போட்டிகளில் 700 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 3 ஆவது இந்தியர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

பிச்சைக்காரன் பேரு மாறனும்... - விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாக இருக்கும் கொலை படத்தின் முன்னோட்டத்திற்காக அப்படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் ஆண்டனி

ஹாலிவுட்டை பார்த்தாலே பயமாக இருக்கிறது… பகீர் கருத்தை வெளியிட்ட 'ஸ்பைடர்மேன்' நடிகர்!

ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் ஸ்பைடர்மேனாக நடித்து உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஒருவர் ஹாலிவுட் எனக்கானது இல்லை,

மனித கறியை ருசித்து சாப்பிட்ட ஆசாமிகள்… போலீசார் கைது!

ஒடிசா மாநிலத்தில் தகன மேடையில் எரிந்துகொண்டிருந்த மனித கறியை சாப்பிட்டுவிட்டு மது அருந்திய இரண்டு பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

'மாவீரன்' படம் பார்த்த அமைச்சர் உதயநிதி.. என்ன கமெண்ட் போட்டிருக்காரு பாருங்க..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நேற்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.