2.0 படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பர்

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோலிவுட்,பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், அக்சயகுமார், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் பல உலகப்புகழ் பெற்ற கலைஞர்களின் பங்களிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு மெகா ஸ்டாரும், ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான சிரஞ்சீவி மற்றும் பிரின்ஸ் மகேஷ்பாபு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினிக்கு ஏகப்பட்ட தெலுங்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் சிரஞ்சிவியும், மகேஷ்பாபுவும் இந்த படத்தில் இணையும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை விளக்க வார்த்தைகளே கிடையாது.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த '2.0' படத்தை ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கும் உடல்நலக்குறைவா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய ரூபாய் நோட்டாக வரதட்சணை கொடுக்காததால் நின்று போன திருமணம்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பலவித குழப்பங்கள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

638 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிடல் காஸ்ட்ரோ

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கியூபா மக்களின் அன்புக்குரியவரும், சேகுவாராவின் உயிர் தோழருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்.

கே.பாக்யராஜூக்கு பார்த்திபன் நடத்தும் 'திரைபாக்கியம்' விழா

கே.பாக்யராஜின் உதவியாளராக இருந்த பார்த்திபன் தற்போது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90