'சீமராஜா' சிவகார்த்திகேயனுக்கு இன்று பிரிவு உபச்சார விழா

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த படத்திற்காக பணிபுரிந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இன்று பிரிவு உபச்சார விழா நடைபெறவுள்ளது.

இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரையும் ஒவ்வொருவராக பாராட்டி அவர்களுக்கு மாலை மரியாதை செய்ய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா முடிவு செய்துள்ளார். இதனால் படக்குழுவினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்,.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் 2: பைனல்ஸ்க்கு நாம ரெண்டு பேரும்தான்: சொல்பவர் யார் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் அதன் புரமோ வீடியோ இருந்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில்

பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை: கணவர் காரணமா?

கடந்த சில மாதங்களாக சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில் நேற்று தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த தேஜஸ்வனி என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து

பிக்பாஸ் 2: ஒருசில மணி நேரத்தில் வெளியேறிய ஓவியா: காரணம் இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுக்கு பின்னர் 17வது நபராக சிறப்பு விருந்தினராக ஓவியா உள்ளே அனுப்பப்பட்டார்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் யார்?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான முக்கிய விதிகளில் ஒன்று ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது என்பது தெரிந்ததே. அந்த வகையில்

பிக்பாஸ் 2: முதல் தலைவரான ஜனனி, ஏமாற்றத்தில் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவருடைய அறிவுரையின்படி போட்டியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி.