close
Choose your channels

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு

Friday, January 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் கனடாவில் படித்துக்கொண்டிருந்தபோது அவரை மர்ம மனிதன் ஒருவன் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம மனிதன் ஒருவன் அவரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளதாக தெரிகிறது. இதனை சற்று தூரத்திலிருந்து பார்த்த மாணவர் ஒருவர் உடனடியாக அருகில் வந்து அந்த படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்க உதவியுள்ளார்.

இதுகுறித்து டொரண்டோ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மாணவியை தாக்கிய மர்ம மனிதன் ஆசியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் வயது சுமார் 20 என்றும் அடையாளம் கூறியுள்ளனர். இந்த மர்ம மனிதனை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி செய்ய வேண்டுமென கனடா போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் உடனடியாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் தெரிவித்து மாணவிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து காயமடைந்த மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கனடா அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment