கமல்ஹாசனுக்கு டி.என்.சேஷன் கொடுத்த மதிப்பு மிகுந்த டைட்டில்

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது கட்சியின் கொள்கையையும் அறிவித்தார். மேலும் ஆறு தென்னிந்திய மாநிலங்களை இணைக்கும் வகையில் ஆறு கைகள் இணைந்த தனது கட்சியின் கொடியையும் நேற்று ஏற்றி வைத்தார்

இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் பயண தொடக்கத்திற்கு பல்வேறு தமிழக, தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் தேர்தல் கமிஷன் டி.என்.சேஷன் அவர்கள் கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவருக்கு 'அறம் வளர்த்த நாயகன்' என்ற பட்டத்தையும் அளித்துள்ளார். இனி உலக நாயகன், அறம் வளர்த்த நாயகன் என்றே அவரது ரசிகர்களால் அழைக்கப்படுவார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன், டி.என்.சேஷன் அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தார் என்பதும், நல்ல உடல்நிலையில் இருந்தால் கமல் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்று டி.என்.சேஷன் அவர்கள் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு கமலின் பதில்களும்:

கமல் பதில்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனிமேல் உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டு விளக்கு. ஊழல் காற்றில் அனையாமல் பார்த்த் கொள்ளுங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் முழு உரை:

37 வருடங்களாக அமைதியாக நற்பணிகள் செய்து கொண்ட கூட்டத்தின் கூர்முனைகளை பார்த்தீர்கள். அதற்கு பின்னால் எத்தனையோ ஆயிரம், லட்சம் தோழர்களின் ஒரு பகுதிதான் இது

ஒரே காரில் கமல்-அரவிந்த் கெஜ்ரிவால்: பொதுக்கூட்ட மேடைக்கு புறப்பட்டனர்

கமல்ஹாசன் இன்று காலை தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கிய நிலையில் இன்னும் சற்று நேரத்தில் மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர்

கட்சி கொடியை ஏற்றினார் கமல்: கொடியின் நிறங்கள் என்ன தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் சற்றுமுன்னர் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றினார்.

இயக்குனர் விஜய் -பிரபுதேவா படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரபல இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்கிய 'தேவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து வருகிறார்