அண்ணா கூறியதைத்தான் ரஜினியும் கூறினார்: அதிமுக அமைச்சரும் ஆதரவு

  • IndiaGlitz, [Friday,August 16 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, காஷ்மீர் பிரச்சினை குறித்தும் மோடி - அமித்ஷா குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பெரும்பாலான அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவினர் மட்டுமே ரஜினிக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ரஜினி கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை தான் வரவேற்பதாகவும், இதே கருத்தை நான் கடந்த 1962-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்கள் கூறியதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரஜினி கூறிய கருத்தை தான் வரவேற்கிறேன் என்றும், நாட்டின் பாதுகாப்பை கருதி கடந்த 1962ஆம் ஆண்டு சீன படையெடுப்பின்போது அண்ணா அவர்கள் இதேபோன்ற ஒரு கருத்தை கூறியதாகவும் இந்த கருத்தையே ரஜினிகாந்த் தனது பாணியில் கூறியுள்ளார் என்பதால் அவருடைய கருத்தை தான் வரவேற்பதாகவும் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்

More News

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா-ஜூலி இணைந்து நடிக்கும் பயங்கர கேம் திரைப்படம்!

பிக்பாஸ் முதல் சிசனில் கலந்து கொண்ட ஜூலியும், பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து ஒரு பயங்கரமான கேம் படத்தில் நடிக்கின்றனர்.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் சமுத்திரக்கனி! என்ன கேரக்டர்?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது

'பிகில்' இசை வெளியீடு குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து

கேப்டனாகிவிட்டார் மதுமிதா! கவின் கோஷ்டிக்கு இரண்டு வாரம் ஏழரையா?

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா திடீரென பெண்களுக்கு ஆதரவாக பொங்குவதும், ஆண்கள் மீது குற்றஞ்சாட்டுவதும் செயற்கையாக இருந்து வரும் நிலையில்

கஸ்தூரி வேலைக்கு ஆகாது! மீண்டும் கலாய்க்கும் கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதா நுழைந்தவுடன் வீடே இரண்டு அணிகள் ஆனது என்பது தெரிந்ததே. ஆண்கள் அணியில் லாஸ்லியாவும், பெண்கள் அணியும் சேரனும் இருக்கும் நிலையில்