கோவிட் சென்ட்ரை சுத்தமாக மாற்றிய, இளம் பத்திரிக்கையாளர் மரணம்...!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

சென்னையைச் சேர்ந்த இளம் செய்தியாளர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஊடக நண்பர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்து உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றி வந்தவர் தான் சென்னையைச் சேர்ந்த இளம் பத்திரிக்கையாளர் பிரதீப் குமார்(29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதற்கு முன் குருநானக் என்ற பள்ளியில் அமைந்துள்ள கோவிட் சென்டரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கழிவறைகளின் சுகாதாரமற்ற முறை மற்றும் உணவுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து கடந்த 12-ஆம் தேதி டுவிட்டரில் கூறியிருந்தார். இதையடுத்து அந்த கோவிட் சென்டர் மற்றும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது, அது குறித்தும் டுவிட் போட்டிருந்தார். இதன் பின் பிரதீப்-ம், அவரது தாயும் கோவிட் சென்டரில் இருந்து தங்களுடைய விருப்பத்தின் வெளியேறுவதாகவும், வீட்டில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீப், கடந்த 17-ஆம் தேதி ஐசியூ படுக்கை தேவை என அரசு ஹெல்ப்லைன் எண்-ஐ டேக் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த அவர் நேற்றிரவு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு, ஊடக நண்பர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

More News

இந்த புகைப்படத்தில் மூன்று பிரபல நடிகர்கள் உள்ளனர்: யார் யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 24ஆம் தேதி சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த தினத்தின் போது சகோதரர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு

பிரபல பாடகிக்கு போனில் தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்: சைபர் க்ரைமில் புகார்!

பிரபல பாடகியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மதுப்பிரியாவுக்கு தொலைபேசியில் மர்ம நபர்கள் தொல்லை கொடுத்ததை அடுத்து மர்ம நபர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

மெல்லிசான டிரான்ஸ்பிரண்ட் உடையில் விஜய் பட நாயகி… கோடிகளில் குவியும் லைக்ஸ்!

கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

புதிதாக உருவான மஞ்சை பூஞ்சை தொற்று....!அறிகுறிகள் என்ன..? தடுப்பது எப்படி...?

கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மஞ்சள்  பூஞ்சை  தொற்று என்ற புதிய நோய் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

குளுகுளு PPE kid … கல்லூரி மாணவரின் அசத்தும் கண்டுபிடிப்பு!

கொரோனா நேரத்தில் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள்,