நீட் வினாத்தாள் தமிழ் மொழிபெயர்ப்பு தவறுக்கு தமிழக அரசே காரணம்: சி.பி.எஸ்.இ

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாளின் தமிழ் பதிப்பில் மொழிபெயர்ப்பு தவறுகள் இருந்ததாகவும், இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் தமிழக நீட் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் தர மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.எஸ்.இ, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் நீட் தேர்வு வினாத்தாள் தமிழ் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட தவறுக்கு தமிழக அரசே காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என்றும், தமிழக அரசு பரிந்துரை செய்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்ததாகவும் சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் மதுரை ஐகோர்ட் தீர்ப்பின்படி தமிழக மாணவர்களுக்கு கிடைத்த 196 மதிப்பெண்களுக்கு ஆபத்து வருமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

More News

சிஸ்டம் சரியில்லை என்ற சொன்ன ரஜினியின் கருத்து மாறியது ஏன்? அமைச்சர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அரசியலில் குதிக்க உள்ளதாக உறுதி செய்தபின்னர் 'ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்து அரசியல் கட்சி தொடங்க அடித்தளம் அமைத்து வருகிறார்

'சர்கார்' பிரச்சனை: விஜய்க்கு ஆதரவளித்த விஜய்சேதுபதி

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது

கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த பிரபல நடிகரின் மகள்

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு நியூட்ரியனிஸ்ட் என்பதும் அவர்  உலகப் புகழ் பெற்ற 'அக்சய பாத்திரம்' என்னும் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக சேவை செய்து வருகிறார்

பகலில் ஆசிரியர், இரவில் டான்: ரஜினிக்கு மீண்டும் ஒரு 'நான் சிகப்பு மனிதன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

கொடூரமாக கொலை செய்தால்கூட பத்தாது: சிறுமியை சீரழித்தவர்கள் குறித்து விஜய்சேதுபதி

சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 11 வயது சிறுமியை 22 பேர் கொடூரமாக பல மாதங்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமையை கண்டு தமிழகமே கொதித்து எழுந்துள்ளது