ஆன்லைன் ரம்மிக்கு தடை: தமிழக அரசு அதிரடி!

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளியாட்டால் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதோடு ஒரு சிலர் தற்கொலை செய்து விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவதை அடுத்து இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பலர் குரல் கொடுத்தனர்

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டு முதலில் பொழுதுபோக்காக ஆரம்பித்து அதன் பின் அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாத வகையில் பல இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தனர். கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி தோல்வி அடைந்து அதன்பின் தற்கொலை செய்து கொண்ட உதாரணங்கள் தமிழகத்தில் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டை தடைசெய்ய வேண்டுமென நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 13 பேர் ஆன்லைன் விளையாட்டால் பணம் நஷ்டம் அடைந்து தற்கொலை செய்து கொண்டனர்

இந்த நிலையில் தமிழக இளைஞர்களை காக்கும் வகையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு உள்பட இணைய வழி விளையாட்டுகளுக்கு தடை விதித்து சமீபத்தில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசரச் சட்டம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு அவர் உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விளையாட்டு விளையாடுபவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைன் விளையாட்டில் அங்கம் வகித்தால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனையும் உண்டு என இந்த அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படுவது இவரா? பரபரப்பு தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ஆரி, பாலாஜி

சந்தோஷமா இரு, நான் போயிருவேன்: குலுங்கி குலுங்கி அழுத சுசி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுசி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் சிறையில் இருந்து வரும் நிலையில், சிறையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாலாஜி புலம்பியதை 3வது புரமோவில் பார்த்தோம்

எனக்கு நடந்தது போல் உங்களுக்கு நடந்திருந்தால் பேண்ட் ஈரமாகியிருக்கும்: குஷ்பு பதிலடி!

எனக்கு நடந்த கார் விபத்து போல் உங்களுக்கு நடந்திருந்தால் உங்கள் பேண்ட் ஈரமாகி இருக்கும் என்று நடிகை குஷ்பு, பிரபலம் ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணா இவர்? வைரலாகும் சிக்ஸ்பேக் ஸ்டில்!

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மத்தியில் மனம் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் என்பது தெரிந்ததே. ஹரிஷ் கல்யாண் தான் டைட்டில் பட்டம் வெல்வார் என எதிர்பார்த்தேன்

உலகிலேயே முதல் முறையாக பேசும் புத்தகங்கள்… அசத்தும் புது முயற்சி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உலகிலேயே முதல் முறையாகப் பேசும் புத்தகம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.